For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து அரண்மனையில் வீராசாமி ஹோட்டல் சாப்பாடு!

Google Oneindia Tamil News

Veerasamy Restaurant
டெல்லி: ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இன்று முதல் இங்கிலாந்து மற்றும் சைப்ரஸ் நாடுகளில் ஒருவாரம் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் அவர் இங்கிலாந்து கிளம்பினா்.

முதலில் லண்டன் செல்லும் அங்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் இருந்து டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியைப் பெற்றுக் கொள்வார்.

பிரதீபாவின் வருகையையொட்டி நாளை பங்கிங்காம் அரண்மனையில் பாலிவுட் இசை, நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரண்மனையில் நடக்கும் முதல் இந்தி இசை நிகழ்ச்சி இதுவே ஆகும். இந்த நடன நிகழ்ச்சிகளை சிம்மி குப்தா தலைமையிலான இங்கிலாந்து-இந்தியக் குழு நடத்தும்.

இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற தென் இந்திய உணவகமான வீராசாமி ரெஸ்டாரண்டில் இருந்து உணவு வகைகள் பரிமாரப்படவுள்ளன.

பின்னர் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், எதிர்க்கட்சி தலைவர் டேவிட் கேமரூன் ஆகிய தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துகிறார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக நாத்பூரி, குலாம்னூன் என்ற இரு இந்தியர்கள் ஏலத்தில் வாங்கிய மகாத்மா காந்தியின் கடிதங்கள் மற்றும் அவரது காதி உடையை ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளனர்.

இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதீபா, சைப்ரஸ் நாட்டிற்கு செல்கிறார்.

அந்த நாட்டு அதிபர் டெமட்ரிஸ் கிறிஸ்டோபியாஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுக்குப் பின் 20 ஆண்டுகள் கழித்து சைப்ரஸ் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி பிரதீபா தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X