For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் மின் வெட்டு-கோவை நிறுவனங்கள் அவதி!

Google Oneindia Tamil News

கோவை: மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டு வருவதால் கோவையில் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து கொடிசியா சங்கத் தலைவர் இளங்கோ கூறுகையில்,

கோவையில் ஒரு குறிப்பிட்ட நேரம் மின் தடை என்று மின்சார வாரியம் அறித்துள்ளது. ஆனால், மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள நேரம் தவிர, கூடுதலாக பல நேரங்களில் மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது.

பொருளாதார நிலை சற்று சீரடைந்து வரும் இந்த சூழலில், மின் தடையால் கிடைக்கும் ஆர்டகளை பெற இயலாமல் பல நிறுவங்கள் தவித்து வருகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் இங்கு வரும் ஆர்டகள் வேறு மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்றுவிடும்.

எனவே, தமிழக அரசு மின் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X