For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை விமான நிலையம்-3 சிங்களர்கள் கைது
சென்னை: பாஸ்போர்ட்டில் போலி முத்திரை இருந்ததையடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தி்ல் போலி 3 சிங்களர்கள் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 12.30 மணிக்கு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிக்க இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்ஷாத், ருஷ்மி ஆகியோர் வந்தனர்.
அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் வழியாக இந்தியா வந்ததாக போலி முத்திரையிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Comments
arrest கைது பாஸ்போர்ட் chennai சென்னை airport போலி passport youths நிலையம் விமானம் சிங்களர்கள் singalese
Story first published: Tuesday, October 27, 2009, 13:29 [IST]