For Daily Alerts
Just In
ஆபரேஷனால் பாதிப்பு-2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும்
நெல்லூரைச் சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை நடத்திய காடராட்க் அறுவைச் சிகிச்சையின்போது, 12 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.
அவர்கள் சங்கர நேத்ராலயா கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டு விட்டது. மற்ற 8 பேரில் ஏழு பேருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இவர்களில் இருவருக்கு நோய்த் தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் இவர்களுக்கு பார்வை பாதிக்கப்படாது, மீண்டும் கண் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல மேலும் இருவருக்கும் பார்வைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, October 28, 2009, 12:10 [IST]