For Daily Alerts
Just In
கொழும்பு: இந்திய ராணுவ குழு-கோதபயா ஆலோசனை
கொழும்பு: பிரிகேடியர் மோனி சண்டி தலைமையில் கொழும்பு சென்றுள்ள இந்திய ராணுவக் குழுவினர் ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சேவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.இந்தியாவிலிருந்து பிரிகேடியர் மோனி சண்டி என்ற அதிகாரி தலைமையில், 14 பேர் கொண்ட இந்திய பாதுகாப்புப் படைக் குழு ஒன்று கொழும்பு வந்துள்ளது.
இக்குழுவினர் கோதபயாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இக்குழுவில் ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
Comments
Story first published: Thursday, October 29, 2009, 12:15 [IST]