For Daily Alerts
Just In
மும்பையில் விமானங்கள் மோதல் தவி்ர்ப்பு!
மும்பை விமான நிலையத்திலிருந்து கிங் பிஷ்ஷர் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. 117 பயணிகளுடன் அந்த விமானம் டேக் ஆப் செய்தவற்காக டாக்ஸி வேயில் இருந்து ரன் வேயை நெருங்கியது.
அதே நேரத்தில் 127பயணிகளுடன் நாக்பூரில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் அதே ரன் வேயில் தரையிறங்கி படுவேகத்தி்ல் சென்று கொண்டிருந்தது.
அப்போது இரு விமானங்கள் மிகக் குறுகிய தொலைவில் ஒன்றை ஒன்று மோதுவது தவிர்க்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிக் கொண்டிருக்கும்போதே கிங் பிஷ்ஷர் விமானம் எப்படி அந்த ரன வேவுக்குள் நுழைந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மொத்தத்தில் 224 பயணிகள் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பியுள்ளனர்.
காஷ்மீரி்ல் ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
இந் நிலையில் காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பைலட் உயிரிழந்தார்.
Story first published: Friday, October 30, 2009, 15:52 [IST]