For Daily Alerts
Just In
கொடைக்கானலில் மூடு பனி-கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தினசரி மழை கொட்டி வருகிறது. இதனாஸ் பியர்சோலா, வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வெள்ளம் போல் கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று பகல் முழுக்க கொடைக்கானலில் சாரல் மழையும், பனி மூட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் ஏரியில் படகு சவாரிக்கு பயணிகளை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், ஏரி வெறிச்சோடி கிடக்கிறது.
கடும் பனி மூட்டத்தால், வாகனங்கள் விளக்கொளியில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, October 30, 2009, 10:22 [IST]