முல்லைப் பெரியாறு அணைக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தர வேண்டும்- கருணாநிதி
சென்னை: கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் அணையின் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் படையினரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது.
தமிழகத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது உச்சநீதிமன்றம், கேரள அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை அமல்படுத்த சட்டப்படியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் செல்ல முடியாமல் தொடர்ந்து கேரள அரசு தடுத்து வருகிறது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அதற்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்களை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.