For Daily Alerts
Just In
தர்மசாலா அருகே பஸ் மலைப்பள்ளத்தில் விழுந்து 22 பேர் பலி
தர்மசாலா: இமாச்சல் பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தில், ஹரிபூர் என்ற கிராமத்திற்கு அருகே பெரிய மலைப்பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 22 பயணிகள் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
இந்தப் பேருந்து நக்ரோதா சூரியான் என்ற இடத்திலிருந்து டேஹ்ரா நோக்கி போய்க் கொண்டிரு்நதபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் விழுந்து விட்டது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டன்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Friday, November 6, 2009, 12:55 [IST]