For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றிக்காய்ச்சல் பயத்தால் சுற்றுலாத் துறை பாதிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பன்றிக்காய்ச்சல் பயம் காரணமாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா கூறுகையில், 'வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சமீபத்தில் குறைந்திருப்பதற்கு பன்றிக் காய்ச்சல் அச்சம் காரணமாக இருக்கும் என தெரிகிறது. எனினும் இந்த சமயங்களில் நமது அன்னியச் செலாவணி வருவாயில் இறங்குமுகம் இல்லை' என்றார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 493. கடந்தாண்டு இதே மாதத்தில், 4 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேர் வந்தனர்.

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை 40 லட்சத்து 23 ஆயிரத்து 88 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கடந்தாண்டில் இந்த எண்ணக்கை 43 லட்சத்து 23 ஆயிரத்து 729ஆக இருந்தது.

ஆனால், இதற்கு மாறாக அன்னியச் செலாவணி வருவாயில் ஏறுமுகம் காணப்படுகிறது. இந்தாண்டு அக்டோபர் மாதம் அன்னியச் செலாவணி வருவாய் ரூ.4,806 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, ரூ.4, 248 கோடியாக இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X