இந்தியாவில் 8000 பேரை பணியமர்த்தும் அக்சென்சர்!
டெல்லி: அக்சென்சர் மற்றும் குளோபல் டெக்னாலஜி இணைந்து இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அரிவித்துள்ளன.
இந்தியாவில் இந்த நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கை 42000 ஆக உள்ளது. இந்த புதிய பணியாளர்களையும் சேர்த்து 50000 பேராக தங்கள் தொழிலாளர் பலத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அக்சென்சர் தலைவர் வில்லியம் டி கிரீன் தெரிவித்துள்ளார்.
வில்லியம் கிரீன் மேலும் கூறுகையில், "உலகம் மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீளத் துவங்கிவிட்டதன் அறிகுறிகள் தெரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் நிலைமைகள் மிகவும் சாதகமாக உள்ளன. எனவே இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. அனலிடிக்ஸ் பிரிவில் இந்த பணியாளர்களை ஈடுபடுத்தப் போகிறோம். இந்தியாவில் இந்த பணிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்கிறது.." என்றார்.
அக்சென்சரின் நடப்பு ஆண்டு வருவாய் 21.58 பில்லியன் டாலர்கள். இந்த ஆண்டு மருந்துகள் உற்பத்தி மற்றும் தொலைபேசித் துறை வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது அக்சென்சர்.