For Daily Alerts
Just In
திமுகவுக்கு தாவலா?-அவதூறு என்கிறார் எம்எல்ஏ
திருப்பூர்: நான் திமுகவில் இணையப் போவதாக சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை; கடும் கண்டனத்துக்குரியவை என்று கூறியுள்ளார் திருப்பூர் எம்எல்ஏ கோவிந்தசாமி.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவில் இணையப் போவதாக சிலர் அபாண்டமான அவதூறு செய்திகள் பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற செய்திகள், உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படு வருகின்றன. இது கட்சியின் மீதும், என் மீதும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக உள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்ற முறையிலும், திருப்பூர் எம்எல்ஏ என்ற முறையிலும், எனது கட்சிப் பணிகளையும், மக்கள் பணிகளையும் வழக்கம் போல் தொடருவேன் என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Monday, November 9, 2009, 15:38 [IST]