இடைத் தேர்தல்: கேரளா-மே.வங்கத்தில் இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வி
டெல்லி: கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ், மற்றும் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்றுள்ளன.
கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச, அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 31 சட்டசபை தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 7ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் கேரளத்தில் கன்னூர், எர்ணாகுளம், ஆழப்புலா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் இடதுசாரிகளுக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
இந்த 3ல் இரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு டெபாசிட் காலியானது.
மே.வங்கத்தில் மம்தா-காங் கூட்டணி வெற்றி:
அதே போல மேற்கு வங்கத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் வென்றுள்ளது.
இன்னொரு தொகுதியி்ல் கோர்கா முக்தி மோர்ச்சா வென்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் இடதுசாரிக் கூட்டணி வென்றுள்ளது. இதன்மூலம் இந்த மாநிலத்திலும் இடதுசாரிகள் பேரிடி விழுந்துள்ளது.
மாயாவதி கட்சி முன்னிலை:
உத்தரப் பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடந்த 11 சட்டமன்றத் தொகுதிகளில் 8ல் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வென்றுள்ளது.
ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும், இன்னொரு இடத்தில் பகுஜன் சமாஜ் அதிருப்தி வேட்பாளர் வென்றார்.
உள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியும் பாஜகவும் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரசும், பாஜகவும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
ராஜஸ்தானில் தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசே முன்னிலையில் உள்ளது. பாஜக பின் தங்கியுள்ளது.
ராஜ் பப்பார் Vs டிம்பிள் யாதவ்:
உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிகியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜ் பப்பார், தன்னை எதி்ர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவை 83,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.