For Daily Alerts
Just In
அமெரிக்க நிதியுதவி அமைப்பின் தலைவராக இந்தியர் நியமனம்
வாஷிங்டன்: சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியுதவி கழகத்தின் (USAID) தலைவராக இந்தியரான ராஜிவ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சின் மெலின்டா- கேட்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றி வந்தவர் ஷா. அவரை இந்தப் பதவியில் நியமித்து அதிபர் பராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
36 வயதான ஷா ஒரு மருத்துவர் ஆவார். அமெரிக்க விவசாயத்துறையில் ஆராயாச்சியாளராக பணியாற்றி வந்த இவர் பொருளாதாரம், நிதியுதவி ஆகிய விவகாரங்களிலும் நிபுணர் ஆவார்.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியுதவி கழகம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் பல திட்டங்களுக்கு பல லட்சம் கோடிகளை செலவிட்டு வருகிறது. இந்த மாபெரும் அமைப்பின் தலைவராக ஷா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, November 12, 2009, 16:34 [IST]