For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூட்டை போட்டுவிட்டு 'காணாமல் போன' திமுக எம்எல்ஏ!

Google Oneindia Tamil News

பழனி: அலுவலகத்திற்கு திண்டுக்கல் பூட்டைப் போட்டு பூட்டி விட்டு மாயமாகி விட்டார் பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன். அவரைக் காணாமல் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனராம்.

இது குறித்து பழனி தொகுதி மக்கள் மற்றும் சமூக சேவர்கள் ஆகியோர் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. மேலும், அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்க மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும், எந்த பகுதிக்கு என்ன என்ன தேவை என்பதை பாதிக்கப்பட்ட அந்த அந்த பகுதி மக்கள் மனுவை எம்எல்ஏ அலுவலகத்தில் கொடுப்போம்.

மழைக்கால நேரங்களிலும், சேதங்களின் போதும் மீட்பு பணியை துரிதப்படுத்த தொகுதி எம்.எல்.ஏ. முன்னின்று நடவடிக்கைகளை எடுப்பார்.

தற்போது எங்களது தொகுதி எம்எல்ஏ அலுவலகம் பூட்டிக் கிடக்கின்றது. எம்எல்ஏ -வை தொடர்பும் கொள்ள முடியவில்லை. இதனால் மழை நிவாரண பணிகள் பாதிப்படைந்துள்ளது.

எனவே, முதல்வர் கருணாநிதி பழனி தொகுதி மக்கள் மீது கருணை கொண்டு பழனி சட்ட மன்ற உறுப்பினரை மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏவை தொகுதிக்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ. கொண்டு சென்றுள்ளது எவ்வளவு பெரிய ஜனநாயகக் கொடுமை...!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X