போட்டோகிராபருக்கு அடி-டைசன் கைதாகி விடுதலை
இதுகுறித்து டைசனின் செய்தித் தொடர்பாளர் டேமி ப்ரூக் கூறுகையில், மைக் டைசன் தனது மனைவி, 10 மாத கைக்குழந்தை ஆகியோருடன் விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சலெஸுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை புகைப்படம் எடுக்க முயன்றார் ஒரு புகைப்படக்காரர்.
இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் டைசனின் குழந்தையை அந்த புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்க முயன்றார். இதையடுத்து புகைப்படக்காரரை தடுத்தார் டைசன்.
இந்த சமயத்தில் டைசனுக்கும், புகைப்படக்காரருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது என்றார்.
ஆனால் டைசன், அந்த புகைப்படக்காரரை தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. புகைப்படக்காரர் கொடுத்த புகாரின் பேரில் டைசனை போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.
டைசன் கைது செய்யப்பட்டதை லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸ் அதிகாரி கெவின் லோவ் உறுதிப்படுத்தினார்.