For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களர்கள் வெறி தாக்குதல்
கொழும்பு: கொழும்பில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கான சிறையில், அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் 7 பேர் மிக மோசமான காயமடைந்துள்ளதாக தகவல்கள்த தெரிவிக்கின்றன.
இன்று காலை இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 தமிழ் அரசியல் கைதிகளை, சிங்களக் கைதிகள் சூழ்ந்து கொண்டு மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் மிக மோசமான காயமடைந்த நிலையில் 7 தமிழர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Story first published: Friday, November 13, 2009, 11:05 [IST]