For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாபநாசம் அணையில் 114.25 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 116.10 அடியானது. அணைக்கு வினாடிக்கு 117.2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 136.12 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் 95.20 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஓரு அடி உயர்ந்து 96 அடியானது. அணைக்கு வி்னாடிக்கு 604 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பாபநாசம் அணை, பிசான பருவ சாகுபடிக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X