For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை - ஹவுரா மார்க்கத்தில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் புசந்த்பூர் என்ற இடத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிழக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டம் காரணமாக சில ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டன. புவனேஸ்வர் - விசாகப்பட்டனம் - புவனேஸ்வர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், பூரி - பலசா பூரி பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

புவனேஸ்வர் - செகந்திராபாத்- புவனேஸ்வர் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில், புவனேஸ்வர் - பலசா இடையே ரத்து செய்யப்பட்டது. பேரம்பூர் - கட்டாக் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது.

செகந்திராபாத் - புவனேஸ்வர் விசாகா எக்ஸ்பிரஸ் பலசா ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது. பலசாவிலிருந்து இந்த ரயில் மீண்டும் செகந்திராபாத் திருப்பி அனுப்பப்பட்டது.

போராட்டத்தின்போது எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X