For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாவீரர் நாள் உரையில் அடுத்தகட்ட அறிவிப்பு-எல்டிடிஇ

By Staff
Google Oneindia Tamil News

LTTE
கொழும்பு: போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். வழக்கம் போல வரும் மாவீரர் நாள் உரையின்போது எங்களது அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்போம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாவீரர் நாள் உரையை பொட்டு அம்மான் படிப்பார் என்று ஒரு தகவல் நிலவுகிறது. இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் அனைவர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு அறிக்கை விடுத்துள்ளது.

அதில்,

கடந்த 18.5.2009 அன்று தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய எமது இயக்கம் சந்தித்த பெரும் பின்னடைவைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் எங்களது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீண்டும் அமைத்து வருவதை அறிந்த இலங்கை பேரினவாத அரசும், அரசுடன் இயங்கி வரும் அரசு துணைக் குழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இவ்வாறான பிரசாரப் போரை முப்பது ஆண்டு கால போராட்ட வரலாற்றில், இலங்கை அரசு பல தடவைகள் நிகழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

எனவே இவ்வாறான போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், எமது விடுதலைப் போராட்டத்துக்கான அடுத்த கட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்க உரையும், வழக்கம் போல எதிர் வரும் மாவீரர் நாள் அன்று நிகழ்த்தப்படும் என்பதனை அறியத் தருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X