For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தமிழக கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட காமராஜர்'

By Staff
Google Oneindia Tamil News

Kamarajar
சென்னை: 1957ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் கூறினார்.

குன்றத்தூரில் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்க துவக்க விழாவில் அவர் பேசுகையில்,

இந்தியாவில் 72 சதவீத மக்கள் கிராமங்களிலும், 28 சதவீத மக்கள் நகர்ப்புறங்களிலும் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 57 சதவீதம் பேர் கிராமப் புறங்களிலும்,43 சதவீத மக்கள் நகர்ப் புறங்களிலும் வசித்து வருகிறார்கள்.

யுனெஸ்கோ புள்ளி விவரப்படி, சீனாவில் 98 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 70 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

ஆனால் பின்தங்கிய மாநிலங்களான ஒரிஸ்ஸா, பிகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆரம்பக் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளதால் தான் தீவிரவாதம், வன்முறை, பயங்கரவாதம் போன்றவை பெருகியுள்ளன.

இந்த சமயத்தில் நாம் பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை எண்ணிப் பார்த்தே ஆக வேண்டும்.

மத்திய அரசு சமீபத்தில் தான் ( கடந்த 2004ம் ஆண்டு) பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்து தமிழகத்தின் கல்வி, சமூக வளர்ச்சியில் பெரும் புரட்சி செய்தார் காமராஜர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X