For Daily Alerts
Just In
ராஜ்யசபா எம்பிக்களாக துவா-ஏ.கே.கங்குலி நியமனம்
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர் ஹெச்.கே.துவா, தொழிலதிபர் ஏ.கே.கங்குலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் 2 நியமன உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதையடுத்து துவா, கங்குலி ஆகியோரை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நியமித்துள்ளார்.
பத்மபூஷண் விருது பெற்றுள்ள துவா தற்போது டிரிப்யூன் பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பத்திரிக்கை ஆலோசகராக இருந்த இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அதே போல பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள ஏ.கே.கங்குலி, கொகத்தாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பிரபலமான ஆனந்த பஜார் பத்திரிகா நிறுவனத் தலைவராவார். இவர் தேசிய அறிவுசார் கமிஷனின் உறுப்பினராகவும் உள்ளார்.
Comments
Story first published: Friday, November 20, 2009, 10:29 [IST]