For Daily Alerts
Just In
அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி
இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. நல்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே 2 குண்டுகள் வெடித்தன. 3வது குண்டு கோபால் பஜார் பகுதியில் வெடித்தது. முதல் 2 குண்டுவெடிப்பு நடந்த 5வது நிமிடத்தில் 3வது குண்டு வெடித்தது.
இந்த குண்டுகள் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. கால் மணி நேரத்திற்குள் 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உல்பா தீவிரவாதிகளே இதற்குக் காரணமாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.
Comments
Story first published: Monday, November 23, 2009, 9:51 [IST]