பாலங்களால் பயனில்லை-ஜெய்பால் ரெட்டி
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரெட்டி பேசுகையில், பாலங்களாக கட்டிக் கொண்டு போவதற்குப் பதில் மெட்ரோ போன்ற திட்டங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
இன்று நாம் நகரங்களில் கட்டி வரும் பாலங்கள் அனைத்துமே கார்களுக்குத்தான் உண்மையில் பலன் தருகின்றன. அந்தப் பாலங்களில் பஸ்களை அதிக அளவில் இயக்க முடியாது. டூவீலர்களுக்குக் கூட அந்த பாலங்கள் உபயோகப்படுவதில்லை.
பாலங்கள் கட்டுவதற்குப் பதில் டெல்லி மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தலாம். இதை பிற நகரங்களுக்கும் கொண்டு செல்லலாம்.
மெட்ரோ தவிர, அதி விரைவு பஸ் போக்குவரத்து போன்ற திட்டங்கள் குறித்து நாம் யோசிக்க வேண்டும். பஸ்களை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் முக்கியமானது. இதற்கு அதி விரைவு பஸ் போக்குவரத்துத் திட்டம் உபயோகமாக இருக்கும். இதில், பஸ்களுக்கென சாலையில் தனி பாதை ஒதுக்கப்படும். இதனால் பஸ்கள் விரைவாக செல்ல முடியும் என்றார் ரெட்டி.