For Daily Alerts
Just In
25 கிலோ தங்கம்- திருப்பி அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்
நகரி: பெயர், முகவரி விவரங்களை தெரிவிக்காததால், 25 கிலோ தங்கக் கட்டிகளை காணிக்கையாக செலுத்த வந்தவரை திருப்பதி கோயில் நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறையில் தங்கத் தகடுகள் பதிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் தங்கத்தை நன்கொடையாக வழங்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியது.
இதனால், பக்தர் ஒருவர் 25 கிலோ தங்க கட்டிகளை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்த எடுத்து வந்தார். அவர் தனது பெயர் விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை.
பெயர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் தங்கக் கட்டிகளை வாங்கமாட்டோம் என்று கூறிய அதிகாரிகள், 'வேண்டுமானால், தங்கத்தை உண்டியலில் போட்டுவிட்டு செல்லுங்கள்' என்று கூறிவிட்டனர். இதையடுத்து அந்த பக்தர் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
Comments
Story first published: Wednesday, November 25, 2009, 17:49 [IST]