For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத்தேர்தல்: இந்திய கம்யூனி்ஸ்ட் ஆதரவு!

By Staff
Google Oneindia Tamil News

Tha Pandian and Jayalalitha
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசியக் குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பாண்டியன், தேர்தல் புறக்கணிப்பை அதிமுக கைவிட்டுள்ளதாலும், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் இடைத் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் அதிமுக பொதுச் செயலாளரை சந்திப்பர் என்றார்.

இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவை ஆதரிக்கும் என்று தெரிகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மண்ணைக் கவ்வின.

இதையடுத்து கொடநாடு எஸ்டேட் சென்றுவிட்ட ஜெயலலிதா இந்தக் கட்சியினரை சந்திக்கக் கூட இல்லை.

இதைத் தொடர்ந்து 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க, இடதுசாரிகள் போட்டியிட்டனர்.

இந்த மோதலில் அதிமுக கூட்டணியை விட்டு இடதுசாரிக் கட்சிகளி்ல் இந்திய கம்யூனிஸ்ட் மீண்டும் அதிமுகவை ஆதரிக்கவுள்ளது.

ஜெயலலிதா-வைகோ சந்திப்பு:

இந் நிலையில் இடைத் தேர்தல் குறித்து ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.

அதிமுகவின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என வைகோ ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X