பெற்றோரை தேடி அழும் யூத குழந்தை மோஷே!
தாய், தந்தை இல்லாததை உணர்ந்து அவன் அவ்வப்போது அழுகிறான், பெயர்களைக் கூறி அழைப்பதாகவும் அவனது தாத்தா ரபி ஷிமோன் ரோசன்பர்க் கூறியுள்ளார்.
நேற்று நரிமன் இல்லத்தில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் மோஷேவுடன், ரோசன்பர்க் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், எனது பேரன் நலமாக இருக்கிறான். பிளே ஸ்கூலுக்குப் போய் வருகிறான். இருப்பினும் அவ்வப்போது அவனுக்கு பெற்றோர் ஞாபகம் வந்து விடுகிறது. இதனால் அழுகிறான். அப்பா, அம்மா எங்கே என்று கேட்கிறான்.
நாங்கள் அவனை சமாதானப்படுத்தி உனது அப்பாவும், அம்மாவும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறோம். ஆனால் அவனோ, அப்படியானால் நானும் அங்கே போகிறேன் என்கிறான். இதனால் நாங்கள் வேதனையில் மூழ்குகிறோம். இருந்தாலும், நீ இன்னும் சின்னப் பையனாக இருப்பதால் இப்போது அங்கு போக முடியாது என்று கூறி அவனைத் தேற்றுகிறோம், நாங்களும் எங்களைத் தேற்றிக் கொள்கிறோம்.
உன்னுடைய பெற்றோர் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்பதை அந்த சிறுவனக்கு நாங்கள் எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என்று தெரியவில்லை என்கிறார் கண் கலங்கியபடி.