For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவசேனாவுக்கு கபில்தேவ் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

Kapil Dev
மும்பை: மும்பை அனைவருக்கும் சொந்தம், நான் மாராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால் அதை விட இந்தியன் என்பதில் முதலில் பெருமிதம் கொள்கிறேன் என்று சச்சின் தெண்டுல்கர் கூறியதற்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் தெண்டுல்கரை சரமாரியாக விமர்சனம் செய்து கட்டுரைரளும் வெளியிட்டார். அதில் தெண்டுல்கர் மராட்டியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இந்தியாவுக்காகவும் விளையாடவில்லை. தனது சொந்த சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்றும் கூறியிருந்தார். ஒருவர் தெரிவித்து இருந்தார்.

இதற்கு கபில்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

நாம் வெளிநாடுகளுக்குச் சென்றால் நம்மை இந்தியனாகத்தான் பார்ப்பார்கள்.

நாம் மராட்டியம் அல்லது ஹரியானா அல்லது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அணியோடு இணையும் போது இந்தியா தான் முக்கியம்.

எப்போதுமே இந்தியா என்பதுதான் முதலில் இருக்க வேண்டும் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தெண்டுல்கர் சொன்னது சரிதான். அதை மதித்து பின்பற்ற வேண்டும். அரசியல்ரீதியான விவாதங்களுக்கு கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுப்பது சரியல்ல.

தெண்டுல்கர் 20 ஆண்டுகள் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போதுள்ள இந்திய அணி சிறந்த அணியாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஒரு சிறந்த அணி இருந்தது இல்லை. டோணி கேப்டன் பதவியில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார் கபில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X