For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவில் குளத்தில் விஷம் கலப்பு-இறந்து மிதந்த மீன்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருவிடைமருதூர்: திருபுவனம் கோவில் குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.

திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் கம்ப கரேஸ்வர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலின் குளத்தை ராஜா என்பவர் குத்ததைக்கு எடுத்து மீன்களை வளர்த்து வந்தார்.

இந் நிலையில் யாரோ சிலர் குளத்தில் விஷம் கலந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

இதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் மற்றும் வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் வளர்ப்பதி்ல் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X