For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனவரிக்குள் 17 சமத்துவபுரங்கள் திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்குள் 17 சமத்துவபுரங்கள் திறந்து வைக்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாகர்கோவிலை அடுத்த ராமபுரம் ஊராட்சி லெட்சுமிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 வது சமத்துவபுரமான இங்கு 9 ஏக்கர் பரப்பளவில் ரூ. இரண்டே முக்கால் கோடி செலவில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பெரியார் சிலை, ரேஷன் கடை, குடிநீர் வினியோகம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு வீட்டு சாவி மற்றும் பத்திரங்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், 'தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தம் 29 சமத்துவபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் 12 திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 17 சமத்துவபுரங்கள் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்படும்.

கூவம் தூய்மைப்படுத்தல், முக்கிய நகரங்களில் பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி்.மு.க கூட்டணி அமொக வெற்றி பெறும்' என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X