எய்ட்ஸ் பரப்பிய காதலன்-கொலை செய்த காதலி
லக்னோ: காதலன் மூலம் தனது எய்ட்ஸ் பாதித்ததால் காதலனை படுகொலை செய்தார் காதலி.
உத்தரப்பிரதேசம், கான்பூரைச் சேர்ந்தவர் அஜய் தாகூர். அதே ஊரை சேர்ந்த ருமா பெண்ணை காதலித்து, இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்தனர்.
அஜய் தாகூருக்கு எய்ட்ஸ் நோய் இருந்ததாகவும், அது தெரியாமல் நெருக்கமாக இருந்ததால் தனக்கும் எய்ட்ஸ் பாதித்துவிட்டதாகவும் ருமா தனது தோழிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக அஜய்தாகூருடன் ருமா அடிக்கடி சண்டை போட்டுள்ளார். பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இந் நிலையில் அஜய் தாகூர் கான்பூரில் நடந்த நண்பர் திருமணத்துக்கு சென்றார். பின்னர் ஊர் திரும்பவில்லை.
அஜய்தாகூர் கத்திக்குத்து காயங்களுடன் காட்டில் பிணமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ருமாவை போலீசார் தேடிய போது அவரை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.