For Quick Alerts
For Daily Alerts
Just In
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை ஒரு வாரத்தில் முடியும்
இந்த வழக்கில் இன்னும் 35 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், மொத்தம் உள்ள 331 சாட்சிகளில் 296 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டனர்.
இன்னும் 35 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. நேரடியாகவோ அல்லது அவர்களின் வாக்குமூலங்களையோ விசாரிக்க வேண்டியுள்ளது. சிலரது வாக்குமூலங்களை பாதுகாப்புப் படையினர் பரிசீலிக்கவுள்ளனர். மற்றவர்கள் குறுக்கு விசாரணைக்குட்படுத்தப்படுவர் என்றார்.
தற்போது கசாப் சார்பில் புதிதாக கே.பி. பவார் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, December 6, 2009, 14:38 [IST]