அடிகளாரை விமர்சிக்க ராமதாசுக்கு தகுதியில்லை: வன்னியர் கூட்டமைப்பு
அந்த அமைப்பின் செயல் தலைவர் சி.என். ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய ராமதாஸ், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை விமர்சித்துள்ளார். அவரால் வன்னிய சமுதாயத்துக்கு ஏதாவது பிரயோஜனமா என்று கேட்டுள்ளார்.
ராமதாசைப்போல பங்காரு அடிகளார் வன்னியர்களை வைத்து அவர்களுடைய பிணத்தின் மீது அரசியல் செய்தவர் அல்ல; வன்னியர்களை வைத்து தன்னையும், தன் குடும்பத்தையும் வளமாக்கிக் கொண்டவரும் அல்ல.
அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் வன்னியர்களின் கோரிக்கையை கை கழுவியவர் ராமதாஸ். தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி வன்னிய சமுதாயத்தையே இழிவுபடுத்தியவர் ராமதாஸ்.
தன் குடும்பமே அரசியலுக்கு வராது என்று கூறிவிட்டு மக்களையே சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தன் மகனை மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து ஆன்மீகத்தின் மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் அனைத்து தரப்பு மக்களையும் தன்பால் ஈர்ப்பவர் பங்காரு அடிகளார்.
அவரால் அனைத்து தமிழர்களுக்கும் பெருமை. அவரை விமர்சிக்க ராமதாசுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார்.