For Quick Alerts
For Daily Alerts
Just In
ரோமிங் கட்டணம் ஒரு பைசா: அதிரடியாகக் குறைத்தது பிஎஸ்என்எல்!
டெல்லி: ரோமிங் கட்டணத்தையும் அதிரடியாகக் குறைத்துள்ளது பிஎஸ்என்எல். இனி இந்தியா முழுக்க ரோமிங் கட்டணம் நொடிக்கு ஒரு பைசா மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுக்கிடையே எழுந்துள்ள கட்டணப் போரில் தீவிரமாக (ரொம்ப லேட்டாக!) குதித்துள்ளது அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்.
இந்த நிறுவனம் தற்போது நொடிக்கு ஒரு பைசா என்ற கட்டணத் திட்டத்தை உள்ளூர் அழைப்புகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது ஆல் இந்தியா ரோமிங் கட்டணத்தையும் ரூ.1.50 லிருந்து நொடிக்கு ஒரு பைசா என மாற்றியுள்ளது.
புதிய திட்டப்படி, நொடிக்கு ஒரு பைசா அல்லது நிமிடத்துக்கு 49 பைசா என விருப்பமான திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாம்.
ஏற்கெனவே அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல், 3 ஜி சேவைக்கே நொடிக்கு ஒரு பைசா என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, December 8, 2009, 13:31 [IST]