For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹசீனாவின் இந்திய வருகை தள்ளிவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜீனாவின் இந்திய வருகை ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19ம் தேதி இந்தியாவுக்கு வருவதாக இருந்தார் ஷேக் ஹசீனா. அவரது வருகைக்கு முன்பாக உல்ஃபா அமைப்பின் தலைவர் உள்ளிட்டோரை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது வங்கதேசம்.

இந்த நிலையில், ஹசீனாவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் கோபன்ஹேகன் மாநாட்டில் பங்கேற்க விருப்பதால் பயணத்தை தள்ளி வைக்குமாறு இந்திய கேட்டுக் கொண்டதால் ஹசீனாவின் வருகை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக வங்கதேச வெளியுறவு அமைச்சர் தீபு மோனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரின் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 அல்லது 11ம் தேதி பிரதமரின் இந்தியப் பயணம் தொடங்கலாம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டதைத் தொடர்ந்து தற்போது பிரதமரின் பயணத்தைத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோபன்ஹேகன் மாநாட்டில் பிரதமர் ஹஜீனாவும் பங்கேற்கிறார் என்றார் தீபு மோனி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X