பாக். ஐஎஸ்ஐ அலுவலகத்தில் இரட்டை குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் தொடர் கதையாகியுள்ளன. தினசரி பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை கண்டு வருகிறார்கள் பாகிஸ்தான் மக்கள்.
லாகூரில் நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் உள்ள உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் அலுவலகத்தில் இரண்டு
குண்டுகள் வெடித்ன.
முதல் குண்டு இன்று பிற்பகலில் வெடித்தது. அடுத்து சக்தி வாய்ந்த இன்னொரு குண்டும் வெடித்தது. இதில் அந்த அலுவலகம் பெரும் சேதத்தை சந்தித்தது. பலர் படுகாயமடைந்தனர்.
அந்தப் பகுதியை ராணுவ போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். யாரும் போகாமல் தடுத்து வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐ அலுவலகத்தின் பாதிப் பகுதி இடிந்து தரைமட்டமாகி விட்டதாக ஜங் செய்தித் தாளின் ஆசிரியர் ஜபர் அஹிர் கூறியுள்ளார்.
படுகாயமடைந்து கிடந்த மக்களை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் சென்றனர். உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை.
இந்த குண்டுவெடிப்பில் அக்கம் பக்கத்தில் உள்ள பல கட்டடங்களும் கூட சேதமடைந்துள்ளன.
ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 22 பேர் பலி
அதே போல ஈராக்கில் பாக்தாத் நகரில் கார் குண்டு வெடித்ததில் 22 பேர் பலியாகினர். 60 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.