For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. கொடும்பாவி எரித்தவருக்கு அதிமுக பதவி

By Staff
Google Oneindia Tamil News

நாமக்கல்: ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தவர்களுக்கும், நடிகர் பாக்யராஜ் மன்றத்தில் நிர்வாகிகளாக செயல்பட்டவர்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக திருச்செங்கோடு தொகுதி பள்ளிப்பாளையம் நகர, ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான புகார்களை கட்சித் தலைமையிடம் நேரி்ல் சந்தித்து அளிக்க 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்னை போயஸ் தோட்டம் சென்றனர்.

பத்து பேர் கொண்ட குழு மட்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெலலிதாவின் இல்லத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தங்களது புகார் மனுவை ஜெயலலிதாவின் உதவியாளரிடம் கொடுத்து விட்டு வந்துள்ளனர். பிரச்னைக்கு காரணமாக இருக்கும் மாவட்டச் செயலர் தங்கமணி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X