For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூர் ஜெ. பிரசாரத்தின்போது கல் வீசப்படலாம் - போலீஸ் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: திருச்செந்தூர் இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கல்வீச்சு நடைபெறக் கூடும் என்று காவல்துறை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.

திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை ஆதரித்து ஜெயலலிதா வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

ஆனால் தற்போது திருச்செந்தூரில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா பிரசாரத்திற்காக செல்லும்போது அவரது வேன் மீது கல்வீச்சு நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீஸார் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனராம்.

திமுக, அதிமுகவினர் மோதல் தொடர்ச்சியாக ஜெயலலிதா பிரசாரத்தின் போது சில இடங்களில் அவர் வேன் மீது கல்வீச்சு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதால், அவரது பிரசாரத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அந்தச அறிக்கையில் உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X