தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு நரேஷ் குப்தா செல்ல தயங்குவது ஏன்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி
தமிழகத்தில் வரும் டிசம்பர் 19 ம் தேதி திருச்செந்தூர் , வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கொடுப்பதாக அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக , காங்கிரஸ, விடுதலை சிறுத்தைகள், உள்ள முக்கிய கட்சியை சேர்ந்த பல ஆயிரம் நிர்வாகிகளும், தொண்டர்களும் திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரு தொகுதிகளில் குவிந்துள்ளனர். இனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும், தேர்தல் முறைகேடு நடக்கவும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தேர்தலை சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய பொறுப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு உண்டு. ஆனால் அவர் இதுவரை அந்த தொகுதிகளில் ஒரு நாள் கூட நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. எனவே அவர் தனது கடமையை தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றனர்.
கடந்த திருமங்கலம் இடைத் தேர்தல் பீகாரை விட மோசமாக இருந்தது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குறிப்பிட்டதக்கது.
இந்த நிலையில் இப்போதாவது தொகுதிகளுக்கு நேரில் செல்ல நரேஷ் குப்தா தயங்கக் கூடாது என்று அவர்கள் கோருகின்றனர்.