For Daily Alerts
Just In
ரூ.73 லட்சம் மோசடி-அதிமுக மாஜி எம்பி மகன் கைது
சென்னை: ரூ.73 லட்சம் மோசடி புகாரில் அதிமுக முன்னாள் எம்பி ஜக்கையனின் மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகர் கணபதி காலனியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் தனக்கு சொந்தமான நிலத்தை விற்றுத் தரும்படி கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாலமணிமார்பன் (26) என்பவருக்கு பவர் பத்திரம் கொடுத்ததாகவும், அவர் அந்த நிலத்தை ரூ.73 லட்சத்துக்கு விற்று மோசடி செய்து விட்டதாகவும், குற்றம் சுமத்தி இருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் புகார் கூறப்பட்ட பாலமணிமார்பன் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
பாலமணிமார்பன் அதிமுக முன்னாள் எம்பி எஸ்.கே.டி.ஜக்கையனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, March 3, 2010, 15:15 [IST]