For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை காலம்-எலுமிச்சை விலை கடும் உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

Lemons
புளியங்குடி: கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் எலுமிச்சை பழம் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் புளியங்குடி மார்க்கெட்டிற்கு வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், கழுகுமலை, கடையநல்லூர், மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து எலுமிச்சையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இவை ஏல முறையில் ஆயிரம் பழங்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் எலுமிச்சை விலை கடந்த வாரத்தை விட மும்மடங்கு உயர்ந்துள்ளது.

ரூ.600 முதல் 800 வரை விற்ற பழங்கள் கடந்த சில நாட்களாக ரூ.2400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம், கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு பழங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.

சாதாரண காலங்களில் 5 முதல் 10 லாரிகள் கொள்முதல் செய்யப்படும். ஆனால் தற்போது எலுமிச்சை பழங்கள் தினசரி 50 முதல் 100 லாரிகள் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.

இவை கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கப்பல், விமானம் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதே போல் பஸ்கள் மூலம் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆந்திராவில் அதிகளவு எலுமிச்சை விளைந்தாலும் புளியங்குடி எலுமிச்சைக்கு தனி மவுசு உண்டு. இங்குள்ள பழத்தில் சிட்ரிக் அமிலத்தின் அடர்த்தி தன்மை அதிகமாக உள்ளது.

எனவே இப்பழங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் குளிர்பானங்களுக்கு மட்டுமல்லாது, உணவு பொருளுக்கு சாராகவும் பயன்படுத்துகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X