For Daily Alerts
Just In
ராக்கிங்: 4 கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்
கோவை: கோவை சட்டக் கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் முதலாமாண்டு மாணவரை இரும்புக் கம்பிகள், ஹாக்கி மட்டைகளால் அடித்து கொடுமைப்படுத்திய நான்கு 3ம் ஆண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மருதமலை ரோட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்தது.
இதில் படுகாயமடைந்த ஜூனியர் மாணவர் நவீன் குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு அவர்களை தேடி வருகின்றனர். ஆனால், இந்த 8 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் இந்த ராகி்ங்கில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்ட 4 மூன்றாம் ஆண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ராகிங் சம்பவத்தால் கல்லூரியில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, March 6, 2010, 11:31 [IST]