For Quick Alerts
For Daily Alerts
Just In
மாட்டு வண்டியிலிருந்து விழுந்து 2 அதிமுக எம்எல்ஏக்கள் காயம்
கோவை: பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் மாட்டு வண்டியில் வந்து நூதனப் போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் வண்டியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் இன்று விலைவாசி உயர்வைக் கண்டித்தும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், நூதன போராட்டம் நடத்துவதற்காக கோவை மேற்கு தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏவான மலரவன், அவினாசி தொகுதி எம்எ
ல்ஏ பிரேமா ஆகிய இருவரும் மாட்டு வண்டியில் வந்தனர்.
அப்போது மாடுகள் மிரண்டு, வண்டி கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, March 6, 2010, 13:21 [IST]