For Daily Alerts
Just In
சத்தியமங்கலம்: திராவிடர் கழகம் சார்பில் தீ மிதி திருவிழா!
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் திராவிடர் கழகம் சார்பில் தீக்குண்டம் எடுத்து தீ மிதிக்கும் விழா நடைபெற்றது.
தீக் குண்டத்தை தூக்குவதும், தீ மீது நடப்பதும் மூடநம்பிக்கை என்பதை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் தி.க. மாணவர் அணி சார்பில், சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. தெருவில் இந்த மூட நம்பிக்ககை ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
தி.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Comments
Story first published: Sunday, March 7, 2010, 12:19 [IST]