பார்க்க வந்த உறவினர்களிடம் சோதனை - பாளை சிறையில் கைதிகள் ரகளை
நெல்லை: தங்களைப் பார்க்க வரும் உறவினர்களிடம் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை ஜெயிலில் கைதிகள் திடீர் ரகளையில் ஈடுபட்டனர்.
மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை தொடர்பாக சாகுல் ஹமீது, ராஜா உசேன், ஜாகீர் உசேன், அப்துல்லா அஜீஸ் ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனி நைனா முகமது ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சீனி நைனா முகமது தவிர மற்ற 5 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களும் சிறையில் உள்ளனர்.
கைதிகளை பார்க்க வருபவர்களை கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாளையங்கோட்டை சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக புழங்கி வருகின்றன. இதை தொடர்ந்து கைதிகளை பார்க்க வருபவர்களை கண்காணிக்க தற்போது விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகர காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆவர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு மாலை அவர்களது உறவினர்கள் பாளையங்கோட்டை சிறைக்கு வந்திருந்தனர். அவர்களை விஜிலென்ஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
இதையறிந்த கைதிகள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். சிறைக்காவலர்கள்தான் சோதனை செய்ய வேண்டும். விஜிலென்ஸ் குழுவினர் சோதனை செய்ய கூடாது என கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.