For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்-கொய்தாவால் இந்தியா, பிரேசிலுக்கு புதிய ஆபத்து- சிஐஏ எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

CIA
ஓக்லாஹோமா (யூஎஸ்): இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் ஓக்லாஹோமா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது சிஐஏ இயக்குனர் லியான் பனேட்டா இத்தகவலை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், 'ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நிர்பந்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பலரும் தங்களின் கூடாரங்களை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தலைவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

அமெரிக்க முயற்சிகள் அல்-கொய்தாவின் தலைமையிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. சிஐஏவின் உதவியுடன் தாலிபான் தீவிரவாத முன்னணி தலைவர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட அல்-கொய்தாவினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் எரிச்சல் அடைந்துள்ள அல்-கொய்தா தலைவர்கள் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இதற்கிடையே, இந்தியா பிரேசில் ஆகிய நாடுகளும் அல்-கொய்தா மூலமாக புதிய ஆபத்துகளை சந்திக்கப்போவதாக தெரிகிறது' என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X