For Daily Alerts
Just In
ஆனைமலை புலிகள் காப்பகம் 15 நாட்களுக்கு மூடல்
பொள்ளாச்சி: கோடை வெயிலை முன்னிட்டு மார்ச் 15ம் தேதி முதல், 15 நாட்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிமீ பரப்பில் பரந்து விரிந்து உள்ளது. இப்பகுதில் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர்.
இந்த நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் தடுப்பணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது.
வன உயிரினங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால், புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை ரத்து செய்ய வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து மார்ச் 15 ம் தேதி முதல் 15 நாட்களுக்கு புலிகள் காப்பகம் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, March 11, 2010, 13:18 [IST]