For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை - சித்தர் காரணமா?

By Staff
Google Oneindia Tamil News

செங்கோட்டை: மழைச் சித்தர் என்ற பெயரைக் கொண்ட பாலகிருஷ்ணன் என்பவர் பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்ததால் அவர்தான் காரணம் என்று செய்தி பரவி விட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (56). பிரம்மச்சாரியான இவரை இப்பகுதி மக்கள் மழைச் சித்தர் என்று அழைக்கின்றனர்.

'நான் மழைக்காக வேண்டினால் மழை பொழியும் இறை வரம் எனக்குக் கிடைத்துள்ளது. வரத்தை பயன்படுத்தி மழை இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் சென்று மழை பெய்ய வைப்பேன்' என இவர் கூறி வந்தார்.

தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தற்போது கடும் அனல் காற்று வீச துவங்கியுள்ளது.

இந்நிலையில் செங்கோட்டை பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை சித்தர் வந்து தியானம், பிரர்த்தனை செய்துவிட்டு சென்றார்.

இந்த பிரார்த்தனை மூலமாக இப்பகுதியில் மழை பொழியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குற்றாலம் வனப்பகுதியின் உள்பகுதி, குண்டாறு நீர்த்தேக்கத்தின் மேல்பகுதியான தெப்பக்குளம், ஆரியங்காவு ஆகிய பகுதிகளில் மழை பொழிந்தது.

இதையடுத்து அந்த சித்தர்தான் இந்த மழைக்குக் காரணம் என செய்தி பரவி விட்டது.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X