For Daily Alerts
Just In
கொச்சிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு அதிகரிப்பு
கொச்சி: கொச்சியை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொச்சி காவல்துறை ஆணையர் மனோஜ் ஆப்ரகாமுடன் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை பேசியுள்ளார். அவரிடம், நகருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து கொச்சி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டஞ்சேரியில் உள்ள யூதர்கள் ஆலயம், கோட்டை கொச்சியில் உள்ள புனித பிரான்சிஸ் சர்ச் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெடும்பச்சேரி சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, March 13, 2010, 16:34 [IST]