நித்யானந்தாவுடன் எனக்கு தொடர்பில்லை!-நடிகை ரோஹினி மறுப்பு
ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியான பிறகு, நாளும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறிவருகிறார் நித்யானந்தன்.
இன்று வெளியாகியுள்ள இரண்டு பத்திரிகைகளில் நித்யானந்தன் பேட்டி இடம் பெற்றுள்ளது. இதில் ரஞ்சிதாவும் நானும் செக்ஸில் ஈடுபட்டது உண்மைதான். அதற்கு என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்று திருப்பிக் கேட்டுள்ளார் நித்யானந்தா.
இன்னொரு பேட்டியில், இது முழுக்க முழுக்க பாலியல் பிரச்சனைகளுக்கான ஆராய்ச்சி. அது பற்றி புத்தகம் எழுதுவேன். அப்போதுதான் உண்மை தெரியும் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில், நித்யானந்தாவுடன் தொடர்புடைய நடிகைகள் என்று நடிகைகள் ராக சுதா, ரோஹினி ஆகியோ்ர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததாக செய்திகள் வந்துள்ளன. ராகசுதாதான் ரஞ்சிதாவை ஆசிரமத்துக்கு அழைத்துப் போனாராம். நித்யானந்தனின் பிரதான சிஷ்யைகளில் ராகசுதாவும் ஒருவராம். எனவே இதுவரை வாய் திறக்காமல் உள்ளார் ராகசுதா.
ஆனால் நடிகை ரோஹினி, இப்போது நித்யானந்தன் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.
அவர் கூறுகையில், "
என்னை நித்யானந்தா சாமியாருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவரை நான் சந்தித்ததே இல்லை. அவரது ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களுக்கும் போனதில்லை.
என்னை நித்யானந்தா கூட்டத்தில் பார்த்ததாக ஒரு நடிகர் கூறியிருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. நான் அந்த கூட்டத்துக்கும் போகவில்லை. இதுபோன்ற விழாகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னை அவருடன் சம்பந்தப்படுத்தி வந்த வதந்திகளால் வருத்தமடைந்துள்ளேன்... என்றார்.
இவர் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியாவார்.